வேலூர், அக்.17- விஐடியில் உயிரி தொழில்நுட்ப சர்வ தேச இரண்டு நாள் கருத்தரங்கை இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசனை மையத்தின் ஆலோசகர் டாக்டர். யோகேஸ்வர ராவ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “மாணவர்களும், இளைஞர்களும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும். ஆராய்ச்சியில் கவனம் செலுத்துவதால் நிறைய வேலை வாய்ப்பு கள் வழங்க முடியும். தற்போது உள்ள வளர்ச்சி, ஆராய்ச்சி கடந்த 20 ஆண்டு களுக்கு முன்பு கிடையாது” என்றார். இந்த கருத்தரங்கில் வாட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் அனில்குமார், டாடா ஆலோசனை சேவை நிறுவனத்தின் , மனித வள துறைத் தலைவர் அந்தோணி தினேஷ், டிசிஸ் ஜினோமிக்ஸ் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சி விஞ்ஞானி டாக்டர். பினுஜா வர்மா கவுர விருந்தினர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர். அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, பிலிப் பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சி யாளர் கள் மற்றும் இந்தியாவிலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்தும் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட னர். இந்த வருடம் பெங்களூரு, சென்னை, கொச்சின், கோயம்புத்தூர், விசாகப்பட்டி னத்தை சார்ந்த முன்னணி உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விஐடி உயிரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் கையெ ழுத்தானது. முன்னதாக, கருத்தரங்க ஒருங்கி ணைப்பாளர் டாக்டர். மோகன ஸ்ரீனிவாசன் கருத்தரங்கை பற்றி விளக்கி கூறினார். விஐடி முன்னாள் உயிரி தொழில்நுட்ப 12 மாண வர்களுக்கு (சாதனை புரிந்தவர்கள்) விருது வழங்கப்பட்டது. விழாவின் துணை ஒருங்கி ணைப்பாளர் டாக்டர். கே.இராமநாதன் அனை வருக்கும் நன்றி கூறினார்.