tamilnadu

img

உத்திரபிரதேசம்:சாலை விபத்தில்  சிக்கி 5 பேர் பலி

உத்திரபிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில்  5 பேர் பலியாகினர்.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா - லக்னோ விரைவுச்சாலையில் பதேகாபாத் அருகே பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலியாகிய நிலையில், மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்துக்கான காரணம்  குறித்து பதேகாபாத், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.