ஏமனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில் 7 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
ஏமன் நாட்டில் தெற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், தலே மாகாணத்தில் நடந்தப்பட்ட இரட்டை வான்வழி தாக்குதல்களில் 7 குழந்தைகள், 4 பெண்கள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை இப் மாகாணத்தில் உள்ள அல் தாவ்ரா மருத்துவமனையில் உள்ள டாக்டர் ஒருவர் மற்றும் பெயர் வெளியிட விருப்பமில்லாத உள்ளூர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தி உள்ளனர்.