திருச்சி, அக்.10- உலக கண் பார்வை தினத்தை முன்னிட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, பாரதிதாசன் பல்கலைக்கழ கம் இணைந்து உலக பார்வை தின விழிப்புணர்வு பேரணி நடத்தியது. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டுதோறும் உலக கண் பார்வை தினத்தன்று மக்களுக்கு கண் நலம் பற்றிய செய்தியை வழங்கி வருகிறார்கள். 126 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 270 லட்சம் பேர் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப் பட்டு உள்ளார்கள் கார்னியல் பார்வை கோளாறினால் பார்வை இழந்தவர்கள் நமது நாட்டில் சுமார் 1 மில்லியன் பேர் உள்ளனர். அவர்களில் பலர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் ஆவர். அவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்க ஒரு வாய்ப்புதான் கார்னியா அறுவை சிகிச்சை. இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கு முக்கியமான தேவை தானமாக கிடைக்க வேண்டிய கண்கள் ஒருவர் இறந்த பிறகு 6 மணி நேரத்திற்குள் அவர்களது கண்களை தான மாக அளிக்கும் பட்சத்தில் அந்த கண்களால் இருவர் மீண்டும் பார்வை பெற வாய்ப்புள்ளது. இந்த விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தொடர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை பாரதிதாசன் பல்கலைகழகம் துணைவேந்தர் மணிசங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் டி.இ.எல்.சி.பேராயர் டேனியல் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். டாக்டர்கள் அகிலன் அருண்குமார், பிரதிபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். இப்பேரணியில் 100 மேற்பட்ட மாணவ மாணவிகள் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட னர். முன்னதாக ஜோசப் கண் மருத்துவமனையின் இயக்கு னர் டாக்டர் நெல்சன் ஜேசுதாசன் வரவேற்றார். நிர்வாக அதி காரி சுபாபிரபு நன்றி கூறினார்.