tamilnadu

மயிலாப்பூர் கோவில் சிலைக் கடத்தல் வழக்கு: இருவர் ரகசிய வாக்குமூலம்

தஞ்சாவூர், ஆக.9-  தஞ்சாவூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் சிலைக் கடத்தல் வழக்குத் தொடர்பாக நடுவர் முன்னிலையில் இருவர் வெள்ளிக்கிழமை அன்று ரகசிய வாக்குமூலம் அளித்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது புன்னை வனநாதர் சன்னதி சிலை, பழமையான மயில் சிலையும், நவக்கிரகத்தில் இருந்த ராகு, கேது சிலைகள் மாற்றப்பட்டன. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து சிலரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சிகளான கோவில் அர்ச்சகர் சேகர், புலனாய்வு அலுவலர் தேவசகாயம் ஆகியோர் நீதிபதி முகமது அலி முன்னிலையில் வியாழனன்று ரகசியமாக வாக்குமூலம் அளித்தனர். இவற்றை நீதிபதி பதிவு செய்து கொண்டார்.