tamilnadu

img

ஊரடங்கால் பாதிப்பு: மாணவர்கள் குடும்பத்திற்கு உதவிய ஆசிரியர்கள்

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி நூற்றாண்டை கண்ட பள்ளியாகும். நீதிபதி முதல் அரசு உயர் அதிகாரிகள் என இப்பள்ளியில் பயின்றவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.   இந்நிலையில் ஆசிரியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர் கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அப்பள்ளியில் பயிலும் 201 மாணவர்களுக்கு அவர்களின் வீட்டிற்கு தேவை யான ரூ.1,50,000 மதிப்பிலான அரிசி மற்றும் மளிகை பொருட்களை கொரோனா நிவாரணமாக மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கினர். முதன்மை கல்வி அலுவலர் இராம கிருஷ்ணன், வட்டாரக் கல்வி அலுவலர் சிவகுருநாதன், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி உமா சங்கர், வட்டார மருத்துவர் மதியழகன், பள்ளி செயலர் சந்திரசேகரன், தலைமையாசிரியர் ராஜாராமன் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.