தஞ்சாவூர், ஜூலை 2- தஞ்சை சேதுபாவாசத்திரம் அருகே குடிமராமத்து திட்டத்தில் ஆண்டிக்காடு கழனியாக்குளம் தூர்வாரும் பணி துவங்கப்பட்டது. கல்லணைக் கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 524 ஏரிகள் வாயிலாக 23,419 ஏக்கரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 170 ஏரிகள் வாயிலாக 8,541 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இதில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 24 பணிகளுக்கு ரூ.777 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது. பட்டுக்கோட்டை தாலுகாவில் உள்ள 272 ஏரிகளில் சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள ஆண்டிக்காடு கழனி யாக்குளம் புனரமைக்க ரூ.63 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாருதல் உள்ளிட்ட பணிகள் இக்குளத்தின் விவசாயிகளை கொண்டு பாசனதாரர்கள் சங்கம் அமைத்து சங்கத்தின் சார்பாக பணிகள் மேற்கொள் ளப்படுகிறது. இப்பணிகளை செவ்வாய்க்கிழமை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை துவங்கி வைத்தார். முன்னதாக விவசாயிகளின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆட்சியர் பேசுகையில், கடந்தாண்டு கஜா புயலில் மாவட்டத்தில் மட்டும் சுமார் 45 லட்சம் தென்னை மரங்கள் அழிந்துள்ளன. மா, பலா, தேக்கு என மொத்தத்தில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்தன. இதுவும் மழை இல்லாமைக்கு காரணம். இந்த மரங்களை மீண்டும் உருவாக்க வேண்டுமானால் குறைந்தபட்சம் 6 ஆண்டு ஆகும் என்றார்.