tamilnadu

img

வெளிநாடுகளின் பணத்தாளில் தமிழ்

புதுக்கோட்டை, மே 14- தமிழ்மொழி, உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் மக்களால் பேசப்பட்டு வருகிறது. அப்படி தமிழ் பேசும்மக்களையும், தமிழ் மொழியையும் அங்கீகரிக்கும் விதமாக அந்தந்த நாடுகளின் பணத்தாள்களின் மதிப்பு தமிழ் எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளின் பணத்தாள்களில் அதன் ரூபாய் மதிப்புதமிழ் எழுத்துக்களிலும் பொறிக்கப் பட்டுள்ளது. இந்த நாடுகளின் பணத்தாள்களின் தொகுப்பை நாணயவியல் கழகநிறுவனத் தலைவர் எஸ்.டி.பசீர்அலி,புதுக்கோட்டை அருங்காட்சியகக் காப்பாட்சியர் (பொ) தி.பக்கிரிசாமியிடம் திங்கள்கிழமை வழங்கினார். இது பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்படுகிறது.