tamilnadu

img

பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீர் : பயணிகள் அவதி

தஞ்சாவூர், டிச.20- தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் கட்ட ணக் கழிப்பறை உள்ளது. இதில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டி நிறைந்து பேருந்து நிலையத்தினுள் கழிவுநீர் வழிந்தோடுகிறது. கடந்த ஒரு மாத காலமாக இந்த நிலை நீடிக்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள், குழந்தைகள், பெரியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தொற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகும் நிலை உள்ளது.  எனவே பேரூராட்சி நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுத்து, சுகாதா ரத்தை பேண வேண்டும்” என ஊரணி சுகாதாரம் மற்றும் கல்வி அறக் கட்டளை தலைவர் ஏ.அப்துல் மஜீது, செயலாளர் ஏ.ஆனந்தராஜ், பொருளாளர் ஆர்.ராஜூ கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி பேரூராட்சி செயல் அலுவலர் மு.மணி மொழியனை நேரில் கோரிக்கை  மனு அளித்தனர். இம்மனுவின் நகல், மாவட்ட ஆட்சியர், தஞ்சாவூர் சுகாதா ரப் பணிகள் துணை இயக்குனர், பேரூராட்சிகள் உதவி இயக்குனர், வட்டாட்சியர் ஆகியோருக்கும் அனுப் பப்பட்டுள்ளது.