tamilnadu

img

சரசுவதி மகால் நூலக கருத்தரங்கு

தஞ்சாவூர், மே 25-தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் வெள்ளிக்கிழமை தஞ்சை நாயக்க மன்னர் கால-தெலுங்கு இலக்கியத் தொண்டு எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நூலகர் எஸ்.சுதர்சன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தமிழ்ப் பண்டிதர் மணி.மாறன் வரவேற்றார். தஞ்சை நாயக்க மன்னர்களும் மற்றும் பன்மொழிப் புலவர்கள் இயற்றிய தெலுங்கு இலக்கியங்களில் காணும் தொண்டு பற்றி மதுரை காமராஜர் பல்கலைக்கழக தெலுங்கு துறை பேராசிரியர்(ஓய்வு) டி.எஸ்.கிரி பிரகாஷ் சிறப்புரையாற்றினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் நூலக நிர்வாக அலுவலரின் உதவியாளர் எம்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தெலுங்கு மொழிப் பண்டிதர் டி.ரவி நன்றி கூறினார்.