பெரம்பலூர், ஜூன் 30- வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம், பெரம்பலூரில் சனியன்று நடைபெற்றது. முன்னதாக மாவட்டத் தலைவர் பாரதிவளவன் வரவேற்றார். கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர்கள் மங்களபாண்டியன், பாலமுருகன், வாசுதேவன், மாநில செயலாளர்கள் முருகையன், தமிழ்மணி, கண்ணன், பிரேம்சந்திரன், மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் பார்த்திபன், பொருளாளர் இளங்கோவன், பெரம்பலூர் டிஆர்ஓ அழகிரிசாமி, ஆர்டிஓ விஸ்வநாதன் உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஊதியம் உட்பட நிலுவை யில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிட அடுத்த கட்ட இயக்க நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் டாஸ்மாக் நிறுவனத்தில் அவுட் சோர்ஸ்சிங் மூலம் மாவட்ட மேலாளர் பணியிடங்கள் நிரப்பும் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற விஏஓவினர்களை பணி நியமனம் செய்ய அரசு வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஷாஜகான், சிவா, சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாநில துணைத் தலைவர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.