சீர்காழி: சீர்காழி அருகே தூர்வாரப்படாத கீழவல்லம் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனர். நாகை மாவட்டம் புதுமண்ணியாறு பாசன வாய்க்காலிலிருந்து கிளை வாய்க்காலாக பிரிந்து செல்லும் கீழவல்லம் வாய்க்கால் புத்தூர், திருமயிலாடி, கன்னாங் குளம், கீழவல்லம், தைக்கால் வழியாகச் சென்று, கொள்ளிடம் ரயில் நிலையம் அருகே தெற்குராஜன் வாய்க்காலில் கலக்கிறது. நான்கு கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வாய்க்கால் பாசன வாய்க்கால்களா கவும் வடிகால் வாய்க்கால்களாகவும் பயன்படுகிறது. சுமார் இரண்டாயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசனம் மற்றும் வடிகால் வாய்க்கால்களாகவும் அப்பகுதியில் உள்ள சுமார் 5 ஆயிரம் குடியிருப்புகளுக்கு மழைக்காலத்தில் அதிகம் தேங்கும் தண்ணீரை எளிதில் வெளியேற்றும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படவில்லை. இதனால் வாய்க்காலின் ஆழம் மற்றும் அகலம் குறைந்தும் வாய்க்கால் முழுவ தும் ஆகாய தாமரை செடிகள் அடர்த்தியாக வளர்ந்து வாய்க்காலை போர்வையால் மூடியது போல் காணப்படுகிறது. தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால், சில தினங்க ளில் மழை நீர் அதிகமாகி வயல்கள் மற்றும் குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. அப்படி தேங்கும் நீரை இந்த கீழவல்லம் வாய்க்காலை தூர்வாரினால் மட்டுமே தண்ணீர் எளிதில் வடியும். எனவே விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கீழவல்லம் கிளை வாய்க்காலை உடனடியாக தூர்வாரி ஆழ்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.