tamilnadu

img

பெட்டவாய்த்தலை பகுதியில் மணல் ரீச் திறக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, ஜூன்16- மணல் மாட்டுவண்டி தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) ஆலோசனை கூட்டம் திருச்சியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்ட தலைவர் ராமர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மணல் மாட்டு வண்டி சங்க மாவட்ட செயலாளர் சேகர், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாட்டுவண்டி மணல் குவாரிகளை திறந்து தொழிலா ளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய திருச்சி ஆட்சியர், பொதுப்பணித்துறை கனிமவளத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பது. மணல் குவாரிகளில் காலை 10 மணிக்கு வழங்கப்படும் சீட்டை காலை 6 மணிக்கு வழங்கி போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட வேண்டும்.  பெட்டவாய்த்தலை, லால்குடி அன்பில் பகுதிகளில் மாட்டு வண்டிகளுக்கான மணல் ரீச் திறக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் குவளைபிரபா, பாலு, உறையூர்பாலு, நொச்சியம் பாலாஜி, பிச்சாண்டார்கோவில் ரமேஷ், ஜான்ரவி, கம்பரசம்பேட்டை ராஜ்மோகன், சர்க்கார்பாளையம் மோகன், கீழமுல்லக்குடி திருஞானம், கொண்டையம்பேட்டை ராஜேந்திரன், லால்குடி அன்பு, பழனிவேலு, கரிகாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.