திருவாரூர்: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு திருவாரூரில் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்களின் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்விற்கு மாவட்ட தலைவர் டி.சீனிவாசன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் வி.முனியன் வரவேற்று பேசினார். மாநில செயலாளர் குருசந்திரசேகரன் துவக்கி வைத்தார். மாநில செயலாளர் பி.ஜீவானந்தம் நிறைவுரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ஜி.மீனாட்சி சுந்தரம், சங்க நிர்வாகிகள் செல்லதுரை, சுப.சிதம்பரம் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைத்தலைவர் ஆர்.தமிழரசன் நன்றி கூறினார்.