தஞ்சாவூர் ஜூன்.8- தஞ்சாவூரில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக்கூட்டம் வெள்ளியன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் ஆ.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கஜா புயல் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு திட்ட இயக்குநர் டாக்டர் டி.ஜெகநாதன் தெரிவித்ததாவது, கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கஜா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டு பட்டா இல்லாதவர்களுக்கு புதிய பட்டா வழங்கி வீடுகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.