பெரம்பலூர், நவ.12- பெரம்பலூரில், மக்கள் சக்தி இயக்கத்தின் ஆலோ சனைக் கூட்டம் மாநில துணைத்தலைவர் க.பெரிய சாமி தலைமையில் செவ்வா யன்று நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர் செல்வேந்திரன் வர வேற்றார் மாவட்ட செயலா ளர் ஜி.சிவகுமார் அறிமுக உரையாற்றினார். சித்த மருத்துவர் கோசிபா, ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவ லர் சந்திரன் ஆகியோர் கருத்துரை ஆற்றினார்கள். மாவட்ட இணைச் செயலா ளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார். தமிழ்நாட்டில் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பெரம்பலூர் மாவட்டத்தில் பால் உற் பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை புதிதாக நிறு விட தமிழக முதல் அமைச்ச ரை கேட்டுக்கொண்டும், மாவட்டத்தில் அதிக ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட் டுள்ள மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்கு தலால் வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளன. இந்த நிலையில் படைப்புழுக்களை கட்டுப் படுத்துவதற்கு அரசு இலவச மாக வழங்கும் பூச்சிக் கொல்லி மருந்தை பாரபட்சம் இன்றி அனைத்து விவசாயி களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.