tamilnadu

img

தமிழ் தெரியாதவர்களும் நீதிபதியாக அனுமதியா? அரசாணையை எதிர்த்து உண்ணாவிரதம்

தஞ்சாவூர், நவ.22- கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்களும் நீதிபதியாகலாம் என்ற தமிழக அரசின் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சா வூர், கும்பகோணத்தில் வழக்கறி ஞர்கள் வெள்ளிக்கிழமை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கீழமை நீதிமன்றங்களில் தமிழ் தெரியாதவர்களும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி நீதிபதியாகலாம் என்ற அரசாணையை தமிழக அரசு கடந்தாண்டு வெளியிட்டது. இதைய டுத்து தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் நவ 24- ஆம் தேதி நீதிபதிகளுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடை பெறவுள்ளது.

இதனைக் கண்டித்தும், தமிழக அரசின் அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு முடிவின்படி வழக்கறி ஞர்கள் வெள்ளியன்று நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து விட்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சாவூர் நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற உண்ணாவிர தப் போராட்டத்துக்கு கூட்டுக்குழு வின் முன்னாள் பொதுச் செயலர் எம்.ஆர்.ஆர். சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். பட்டுக்கோட் டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஆர்.ராமசாமி, தமிழர் தேசிய பேரி யக்கத் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறி ஞர்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் 

அதே போல் கும்பகோணம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பாக, சங்கத்தின் தலைவர் லோகநாதன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது. கூட்டுக்குழுவின் துணைத் தலைவர்கள் ராஜசேகர், சங்கர், கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத் தின் செயலாளர் தரணிதரன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். போ ராட்டத்தில் ஏராளமான வழக்கறி ஞர்கள் பங்கேற்றனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை பொது அலு வலக வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வழங்கறிஞர்கள் சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதர சங்க நிர்வாகிகள் மற்றும்  மூத்த வழக்கறிஞர்கள் கோரிக்கைக ளை விளக்கிப் பேசினர். காலை 10 மணியிலிருந்து மாலை வரை நடை பெற்ற போராட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.