குழித்துறை, ஜூன் 2-கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலுள்ள கரையோரங்களில் சுமார் 400க்கும் அதிகமான செங்கல் சூளைகள் உள்ளன. இங்கு பணியாற்றும் சுமார்5000-க்கும் அதிமானோர் காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை கடும் வெயிலையும் பாராமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர். தினசரி 500 முதல்650 வரை சம்பளம் வாங்கி தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். தற்போது செங்கல் உற்பத்திக்கு போதுமான மண் கிடைக்காததால் செங்கல் உற்பத்தி பாதிக்கும் நிலைஏற்பட்டுள்ளது. இனி வருகின்ற அக் டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதம் வரையில் மழை காலங்கள் என்பதால் செங்கல் உற்பத்தி பாதிப்பதோடு தங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கும் என தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆறுகள், குளங்கள்,வாய்கால்களில் மண் எடுக்க அரசு தடை, நீதிமன்ற உத்தரவின் பேரில் மாசுகட்டுப்பாட்டு துறையின் நெருக்கடி, திடீர் காற்று, மழை என இயற்கை சீற்றம் மட்டுமல்லாமல் தற்போது நெல்லை மாவட்ட பகுதியில் இருந்து மண் எடுத்து வருவதால் வாகன வாடகை அதிகம் என்பதாலும், எங்கள்முன்னோர்கள் வழி வந்த பாரம்பரிய தொழிலுக்கு மாற்றுதொழில் தெரியாத நிலையில், இன்றைய எங்கள் வாரிசுகள் இந்த தொழிலை கற்றுக் கொள்ள விரும்பாத நிலையில், குமரியில் மண்பாண்டம் தொழில் நாளுக்கு,நாள் அருகி வருவதாக மண் பாண்டதொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தார்கள். பல்வேறு வகையில்பாதிக்கபடும் செங்கல் உற்பத்தியாளர்களும் தொழிலாளர்களுக்கு அரசு நிவாரணம் தந்தால் மட்டுமே தங்களுடைய வாழ்வாதரத்தை உயர்த்த முடியும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.