tamilnadu

img

இப்தார் நோன்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே 27-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர வர்த்தகர் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஜமாலியா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வர்த்தகர் கழகத்தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி முன்னிலை வகித்தார். பள்ளிவாசல் ஜமாஅத் சார்பில் செயலாளர் சேக் அலாவுதீன், பொருளாளர் கே.கான்முகமது ஆகியோர் வரவேற்றனர். தமிழ்நாடு மெட்ரிக், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலதுணை பொதுச் செயலாளரும், குமரப்பா பள்ளி தாளாளருமான முனைவர் ஜி.ஆர். ஸ்ரீதர், வர்த்தகர் கழக கட்டுப்பாட்டுகமிட்டி உறுப்பினர்கள் எஸ்.கந்தப்பன், க.அன்பழகன், டாக்டர்மு.சீனிவாசன், எஸ்.டி.டி.சிதம்பரம், நிர்வாகிகள் எஸ்.டி.டி.வெங்கடேசன், பி.எஸ்.அப்துல்லா, அபிராமி சுப்பிரமணியன், கிரில் நீலகண்டன், விஸ்வம் பேக்கரி கே.லெட்சுமணன், கே.பி.கிருஷ்ணமூர்த்தி, கே.கே.டி.சுப்பிரமணியன், ஜி.ராஜா, கோவிந்தன், செல்லத்துரை, பால் ஏ.பக்கர் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.