tamilnadu

img

இந்து மக்கள் கட்சி நிர்வாகி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

அம்பேத்கருக்கு காவி சாயம் பூசி அவமதிப்பு செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கும்பகோணத்தில் அம்பேத்கர் நினைவு நாளன்று, அம்பேத்கருக்கு காவி சட்டை அணிவித்து, குங்குமப்பொட்டு, பட்டை அடித்து சுவரொட்டிகளை ஒட்டப்பட்டது. இவ்வாறு அம்பேத்கருக்கு காவி சாயம் பூசி அவமதிப்பு செய்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி குருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர். இந்த சூழலில், குருமூர்த்தி மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் குருமூர்த்தி, கும்பகோணம் கிளை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.