tamilnadu

img

சிஐடியு கொடிப் பயணத்திற்கு மணப்பாறையில் சிறப்பான வரவேற்பு

திருச்சிராப்பள்ளி, செப்.17- இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) 14-வது மாநில மாநாடு காஞ்சி புரத்தில் வரும் 20, 21, 22 ஆகிய 3 நாட் கள் நடைபெறுகிறது. இதையொட்டி தூத்துக்குடியிலிருந்து சிஐடியு மாநில செயலாளர் ரசல் தலைமையில் புறப் பட்ட கொடிப்பயணம் செவ்வாய் அன்று மணப்பாறை வந்தடைந்தது.  பயணக்குழுவிற்கு சிஐடியு மணப் பாறை கமிட்டி சார்பில் சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாநில செயலாளர்கள் மோகன், ஆர்.எஸ். செண்பகம், மாநில துணைத் தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணி, திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் கே.சிவராஜன், புற நகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல் வம், மாவட்ட பொருளாளர் சம்பத், சாலை போக்குவரத்து சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஒருங்கி ணைப்பாளர் எஸ்.எம் ஷாஜகான், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கே. நவமணி, வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பி.பாலு, சிஐடியு மருங்காபுரி ஒருங்கிணைப்பாளர் என். அழகர்சாமி, வாலிபர் சங்க வட்ட தலை வர் இளையராஜா, சிஐடியு மின் ஊழி யர் சங்க தலைவர் அந்தோணிசாமி, செயலாளர் ரியாசுதீன், துணைத்தலை வர் கண்ணன், சிபிஎம் வையம்பட்டி ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, வட்ட குழு உறுப்பினர் என். சீனி வாசன், மூத்த தோழர் என்.நல்லு ஆகி யோர் கலந்து கொண்டனர்.