மன்னார்குடி, மே 12-சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளராக டாக்டர் கிருஷ்ணமோகன் பொறுப்பேற்றுக் கொண்டார். மேற்படி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறை தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் கிருஷ்ணமோகன், அதே பல்கலைக்கழகத்தில் பதிவாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். டாக்டர் கிருஷ்ணமோகனுக்கு பேராசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.