tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, ஜூன் 1-காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வேதாந்தா நிறுவனம் மற்றும் ஒ.என்.ஜி.சிக்கும் அனுமதி வழங்கி இருப்பதை ரத்து செய்திடக் கோரி மாபெரும் முழக்கப் போராட்டம் வெள்ளியன்று மன்னார்குடியில் நடைபெற்றது. சிபிஐ மற்றும் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கீழப்பாலத்தில்  நடைபெற்ற போராட்டத்திற்கு விச செயலாளர் வி.எம்.கலியபெருமாள் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது கீழப்பாலம் குளத்தில் இறங்கி கருஞ்சட்டிகள் உடைக்கப்பட்டன. கோரிக்கையை விளக்கி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர் வீ.கலைச்செல்வன் மற்றும் மாவட்டக்குழு ஆர்ஜி.ரெத்தினகுமார் பேசினர். நகர விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் எம்.செல்வராசு கண்டன உரை நிகழ்த்தினார். நகர வி.தொ.ச செயலாளர் பி.ராஜ்குமார், நகர  விச தலைவர் எம்.செல்வராசு, நகர வி.தொ.ச தலைவர் மற்றும் விவசாய சங்க உறுப்பினர்கள் எம்.சின்னகண்ணு, ஏ.பக்கிரிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொகுத்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் அஸ்வினி கலைச்செல்வன் தொகுப்புரை வழங்கினார். போராட்டத்தில் 100 பேர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.