திருச்சிராப்பள்ளி, ஜூன் 25- வீட்டு வரி, வணிக நிறுவனங்களுக் கான வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். மாசு படிந்து வரும் காவிரி நீரை சுத்தப்படுத்தி வழங்க வேண்டும். குண்டும் குழியுமாக உள்ள ரோடு களை சீரமைக்க வேண்டும். மணல் வாரிதுறை சாலையில் 24 மணி நேர மும் செயல்படும் டாஸ்மாக் மதுபான பாரை மூடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிழக்கு பகுதிக்குழு பாரதிநகர் கிளை சார்பில் திங்க ளன்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செய லாளர் சோலைராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கட்சியின் மாநகர் மாவட்ட செயலா ளர் ராஜா, கிழக்கு பகுதி செயலாளர் சிவகுமார், வாலிபர் சங்க மாநகர் மாவட்ட தலைவர் சந்திரபிரகாஷ், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா ஆகி யோர் பேசினர். வாலிபர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் லெனின், மாண வர் சங்க அருணாச்சலம், சிபிஎம் கிளை உறுப்பினர்கள் சுரேஷ், பூபதி, சந்திரசேகரன், தமீம், முருகன், மொய்தீன், முத்துக்குமார், பிரபு, பாரதிசீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஷாஜகான் நன்றி கூறி னார்.