திருச்சிராப்பள்ளி: சிஐடியு தொழிற்சங்கத்தின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு பெல் சிஐடியு சங்கம் சார்பில் மாணவ – மாணவியருக்கு வண்ணம் தீட்டுதல், ஓவியம், கட்டுரை, பேச்சு போட்டிகள் கடந்த 3-ந் தேதி திருவெறும்பூர் கணேசா அருகில் உள்ள ஆர்எஸ்கே பள்ளியில் நடைபெற்றது. இதில் எல்கேசி முதல் 3ம் வகுப்பு வரை வண்ணம் தீட்டுதல், 4 முதல் 5ம் வகுப்பு வரை ஓவியம் வரைதல், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உலகை நான் எவ்வாறு வரைய றுப்பேன்?, என் குடும்பம் எனக்கு என்ன கற்பித்தது. என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமூக ஊடகங்கள் என் பார்வைவில், கீழடியில் தமிழர் நாகரீகம் என்ற தலைப்பி லும், 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு என்ன செய்ய வேண்டும், குடும்பத்தில் பெண்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் 3000 த்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து சிஐடியு பொன்விழா போட்டிகள் பரிசளிப்பு விழா வியாழனன்று திருச்சி பெல் எம்டி ஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு பெல் சிஐடியு சங்க பொதுச்செயலாளர் பிரபு தலைமை வகித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மதுக்கூர் ராமலிங்கம், சிஐடிய புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன் ஆகியோர் போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிப் பெற்ற முதல் 3 பேருக்கு பதக்கம் அணிவிக்கப்பட்டு சீல்டு மற்றும் சான்றிதழ்களும் மேலும் 10 ஆறுதல் உள்பட 275 மாணவ –மாணவியருக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை பெல் சிஐடியு சங்க அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பி னர்கள் செய்திருந்தனர். முன்னதாக பெல் சிஐடியு சங்க துணை செயலாளர் சந்திரசேகரன் வர வேற்றார். அமைப்பு செயலாளர் ராஜேஷ் கண்ணா நன்றி கூறினார்.