மாவூர், நவ.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்க ளில் ஒருவரான தோழர் பி.மாதவன் கடந்த 35 ஆண்டு காலமாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அவர் இயக்கப்பணி ஆற்றிய காலங்களில் தான் வாங்கி படித்துவிட்டு சேமித்து வைத்திருந்த 1000 புத்தகங்களை மற்ற வர்களும் படிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு ஊர்ப்புற நூலகத்திற்கு வழங்கும் எளிய நிகழ்ச்சி மாவூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் வி.ராஜாங்கம் எஸ்.ரெகுபதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.நாகராஜன் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினரும் எழுத்தா ளருமான ஐ.வி.நாகராஜன் புத்தகங்களை வழங்கினார். இந்தப் புத்தகங்களை குன்னியூர், பின்னவாசல், திருக்காரவாசல், ஆகிய ஊராட்சிகளின் ஊர்ப்புற நூலக பொறுப்பாளர்கள் பெற்றுக்கொண்டனர். நூல்களை வழங்கிய மூத்த தலைவர் பி.மாதவன் ஏற்பு ரையாற்றினார்.
இந்நூல்களை வழங்கி ஐ.வி.நாகராஜன் பேசியதா வது: தோழர் பி.மாதவன் உயிரோடு இருக்கும்போது இரத்ததானம், உறுப்பு தானம் செய்வதையும், இறந்த பின்பு உடல் தானம் செய்வ தையும் தன்னுடைய கொள் கையாகக் கொண்டவர். இவர் ஏற்கனவே திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி க்கு அவர் பிறந்த தினத்தின் போது உடல் தானம் செய்து உறுதிஎடுத்துக்கொண்டவர். அதைத் தொடர்ந்து இப் போது தான் கட்சி பணியாற் றிய காலங்களில் சொந்தமாக வாங்கி படித்து சேமித்து வைத்திருந்த அரசியல், சமூகம், பொருளாதாரம், சார்ந்த ஆயிரக்கணக்கான புத்தகங்களை தான் படித்தால் மட்டும்போதாது மற்றவர்களும் படிக்கவேண் டும் என்ற நல்ல நோக்கத் தோடு ஊர்ப்புற நூலகங்க ளுக்கு வழங்கியுள்ளது வரவேற்கவேண்டிய ஒன்று. இத்தகைய அர்ப்பணிப்பான காரியங்களை மற்றவர்களை யும் செய்ய வைப்பதற்கு இது தூண்டுகோலாக அமையும். இதுபோன்ற நிகழ்ச்சிகள் இந்த சமூகத்தில் தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய வேண்டுகோ ளும் கூட. தோழர் பி.மாதவ னின் இந்த சேவை முக்கியத் துவம் வாய்ந்தது. இவ்வாறு பேசினார்.