tamilnadu

img

ஏலம் விடப்பட்ட கடை ஆக்கிரமிப்பு: அதிகாரிகள் நடவடிக்கை

தஞ்சாவூர், ஜூன் 29- தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் உள்ள ஒரு ஓட்டு கட்டிடத்தில் செயல்பட்ட கடை ஒன்று, கடன் தொகை செலுத்தாத காரணத்தால் பட்டுக்கோட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை சார்பில் ஆன்லைன் மூலம் ஏலம் விடப்பட்டது.  இக்கடையை புனல்வாசல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் ஏலத்தில் எடுத்தார். இந்நிலையில் அந்த கடை சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.  இதைதொடர்ந்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பூங்கோதை, வங்கி கிளை பொதுமேலாளர் சத்தியநாராயணா, வட்டாட்சியர் அருள்பிரகாசம் ஆகியோர் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கடையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.