tamilnadu

img

அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, டிச.7- காப்பீட்டு கழக ஊழியர் சங்கம்  தஞ்சை கோட்டம் சார்பில் வெள்ளியன்று அம்பேத்கர் நினைவு தின கருத்தரங்கம் திருச்சி எல்ஐசி யூனிட் 1 கிளையில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட பொதுச்செயலாளர் சேதுராமன் தலைமை வகித்தார். அம்பேத்கரும், ஜனநாயகமும் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன் பேசினார்.  கருத்தரங்கில் எல்ஐசி, ஜிஐசி மற்றும் பிஎஸ்என்எல் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் தஞ்சை கோட்டம் துணைத்தலைவர் ஜோன்ஸ் வரவேற்றார். இணைச் செயலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.