குடவாசல், அக்.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மா வட்டம் குடவாசல் கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள தியாகி தங்கையன் நினைவு அரங்கத்தில் குடவாசல் நகரப் பகுதி வாலிபர் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் வாயிலாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் குடவாசல் நகர பகுதிக்கு புதிய கிளை அமைக்கப்பட்டது, புதிய கிளைக்கு கிளை தலைவராக பி.ஜோதிவேலன். கிளை செயலாளராக பி.சுகதேவ், பொருளாளராக ஆர்.ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வாலிபர் சங்க புதிய கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் சிறப்புரையாற்றினார். செயற்குழு உறுப்பினர் தினா, குடவாசல் செயலாளர் பகத்சிங், தலைவர் குமரேசன், துணை தலைவர் பாரதி உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.