மன்னார்குடி, செப்.22- மார்க்சிஸ்ட் தத்துவார்த்த மாத இதழின் வாசகர் வட்டம் மன்னார்குடியில் ஞாயிறன்று நடைபெற்றது. இரா.தாமோதரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமாரராஜா அறிமுக உரையாற்றினார். கே.அகோரம், மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் குறித்த விமர்சன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தமிழ்மணி விவாதங்களை துவக்கி வைத்து உரையாற்றினார். விவாதங்களில் ஜி.ரெகுராமன், ஜி.ரெகுபதி, வீ.கோவிந்தராஜ் பங்கேற்றனர். விமர்சனங்கள் விவாதங்களின் முடிவில் தொகுத்து மாநில கல்விக்குழு உறுப்பினர் அ.அன்வர் உசேன் சிறப்புரையாற்றினார். மன்னார்குடி நகரக்குழு செயலாளர் எஸ்.ஆறுமுகம் பத்து மார்க்சிஸ்ட் சந்தாக்களை தோழர் அ.அன்வர் உசேனிடம் அளித்து நன்றி கூறினார். வாசகர் வட்டத்தில் முத்துப்பேட்டை கோட்டூர் மன்னார்குடி திருத்துறைபூண்டியிலிருந்து மார்க்சிஸ்ட் வாசகர்கள் கலந்து கொண்டனர்.