குடவாசல், ஜூலை 29- வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள கீழவி டையல் ஊராட்சியில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியேறும் போ ராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கீழவிடையல் ஊராட்சியில் உள்ள நடுத்திட்டு கிராமத்திற்கு சோழ சூடா மணி ஆற்றின் குறுக்கே உடனடியாக தற்கா லிக நடைபாலம் அமைத்திடவும், விடையல் கருப்பூரில் உள்ள ரேஷன் கடையை அனைத்து வேலை நாட்களிலும் திறந்திட வேண்டும். விச்சூர் தெருவிலிருந்து மயா னத்திற்கு செல்லும் சாலையை அகலப்ப டுத்தி தார்ச்சாலையாக அமைத்துத் தர வேண்டும்.
கீழத்தெருவிலிருந்து மயானதிற்கு செல்லும் சாலையை தார்ச்சாலையாக மாற்றி தர வேண்டும், கீழ விடையலில் உள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்துத் தர வேண்டும் உள்ளிட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பாக கீழ விடையல் ஊராட்சி அலுவலகம் முன்பு குடியேறும் போ ராட்டம் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் எஸ்.இளங்கோ வன், மாநிலக் குழு உறுப்பினர் இ.மைதிலி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.விஜய், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ஆகியோர் வாலிபர் சங்க நிர்வாகி களிடம், தங்களின் அனைத்து கோரிக்கைக ளையும் அரசுக்கு பரிந்துரை செய்து நிறை வேற்றுவதாக உறுதி அளித்தார். இதைய டுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.