திருவண்ணாமலை, நவ. 14- திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு- காஞ்சிபுரம் பிரதான சாலையில் கடந்த ஓராண்டு காலமாக சீரமைப்பு பணிகள் மிக மெத்தனமாக நடைபெற்றுவருகிறது. இத னால் போக்குவரத்து மற்றும் வணிகங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவசரத்திற்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை கொண்டு செல்ல ஆம்பு லன்ஸ் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு அவசர சிகிச்சைக்காக காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறுக்கோ, செய்யாறில் இருந்து காஞ்சிபுரத்திற்கோ உட னடியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. பள்ளி,கல்லூரி பயிலும் மாணவர்களும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுனர்களுக்காக மாற்றுப் பாதை அமைத்தி ருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த மாற்றுப்பாதை இதை விட மோசமான நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆரணி மக்களவை உறுப்பி னர் டாக்டர் விஷ்ணுபிரசாத் தலைமையில், பழுதடைந்த சாலைகளை ஆய்வு செய்து, சாலையை விரைவில் சீரமைக்கக் கோரி மக்களோடு கலந்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். பின்பு அதிகாரிகளுடன் செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரம் தலைமை யில் நடந்த பேச்சுவார்த்தையில், வரும் டிசம்பர் 31க்குள் பணிகளை முடித்துவிடு வோம் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டம் கை விடப்பட்டது.