திருவண்ணாமலை, ஆக.10- திருவண்ணாமலை நக ராட்சிக்குட்பட்டு 39 வார்டு களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான வாக னங்களுடன், திருவண்ணா மலை, மேல்மருவத்தூர், மேல்மலையனூர் போன்ற ஊர்களுக்கு, வெளியூர்களி லிருந்து சுற்றுலா வரும் வாக னங்கள் என, தினமும் ஏராள மான வாகனங்கள் நகர பகுதியை கடந்து செல்வது டன், நகர வீதிகளில் நிறுத்தப் படுகிறது. மாவட்டத்தின் தலைநக ராகவும், பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் மலை உள்ளதாலும் போக்கு வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து காவல்துறை யினர் சார்பில் அறிவொளி பூங்கா, ராதா லாட்ஜ் ரவுண் டனா, பெரியார் சிலை, காந்தி சிலை, காமராஜர் சிலை, செங்கம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சிக் னல் உள்ளன. இருப்பினும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாத நிலையே தொடர்கிறது. தேரடி தெரு, திருகூடல் தெரு, பெரியதெரு ஆகிய சாலைகளில் உள்ள கடைக ளுக்கு, பொருட்கள் வாங்க வருபவர்கள் தங்களது டூவீ லர்கள், கார் ஆகியவற்றை முறையாக நிறுத்தாமல் சாலையின் இரு புறங்களி லும் நிறுத்தி விடுகின்றனர். இதனால் இந்த சாலை களில் செல்லும் கார், டூவீலர் கள் நெரிசலில் சிக்கி கொள்கின்றன. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. சுற்றுலா வரும் வாகனங் கள், நகருக்குள் பயணிகளை இறக்கிவிட்டு, வாகனங் களை நகருக்கு வெளியே பார்க்கிங் செய்யவேண்டும், திருவண்ணாமலை நகரை சுற்றி அமைக்கப்பட்டள்ள, ரிங்ரோடு திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும், திருவண்ணாமலையில் புதிதாக அமைக்கப்படும் மால்கள், நகைக்கடைகள், ஜவுளிகடைகளை நக ருக்கு வெளியே வணிக வளா கங்களாக அமைக்க வேண் டும் என திருவண்ணாமலை நகர மக்கள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.