திவண்ணாமலை,நவ.13- திருவண்ணாமலை ராமலிங்கனார் தெரு பகுதியில், கள்ளச் சந்தையில் அதிக அளவு மதுபானம் விற்பனை நடப்பதால், பொது மக்கள் பாதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சிய ரிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித் துள்ளனர். ராமலிங்கனார் தெரு கங்கையம்மன் கோயில் அருகே, பெட்டிக்கடைகளில் மது பானங்கள் விற்கப்படுகிறது. இதனால் அங்கு வந்து மதுபானத்தை வாங்கிக் குடிக்கும் நபர்களால், அப்பகுதியில் வசிக்கும் மக்க ளுக்கு தினசரி இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர்.