திருவள்ளூர், ஜூன் 8 - காட்டுப் பன்றிகளிடமிருந்து கரும்பு உள்ளிட்ட பயிர்களை காப்பாற்றவும், இழப் பீடு வழங்கவும் வலியுறுத்தி திருத்தணி வனச்சரகரிடம் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தினர் மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் உள்ள அத்திமாஞ்சேரி, பொதட்டூர்பேட்டை, பாண்ர வேடு, புண்ணியம், கொல்லாலக்குப்பம், நொச்சிலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்தப்பகுதிகளில் கரும்பு, வேர்க் கடலை, நெல் போன்ற பயிர்களை காட்டு பன்றி கள் நாசப்படுத்தி வருகின்றன. இதனால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிகளின் தொல்லையால் விவசாய உற்பத்தி குறைந்து வருகிறது. விவசாயிகள் பாதிக்கப்பட்டு, பெரும் இன்னலுக்கு ஆள கின்றனர். பன்றிகளால் சேதமடைந்த கரும்பு ஏக்கர் ஒன்றிற்கு 50 ஆயிரம் ரூபாயும், வேர்க் கடலை, நெல் ஆகியவற்றிற்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும் நட்ட ஈடாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருத்தணி வனச் சரகரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பாபு, செயலாளர் சி.பெருமாள், நிர்வாகிகள் ஜெயச்சந்திரன், ஸ்ரீநாத் ஆகியோர் வழங்கினர்.