tamilnadu

img

பாரத் பெட்ரோலிய நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு

திருவள்ளூர், அக்.19-  பாரத் பெட்ரோலிய நிறு வனங்களை தனியாருக்கு  விற்கும் மோடி அரசை கண்டித்து  தமிழ்நாடு பாரத் பெட்ரோலிய கேஸ் தொழிலா ளர் சங்கத்தின் சார்பில்  கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமையன்று (அக். 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்  சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன் பேசுகையில், ‘நாடு முழு வதும் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் சார்பில் 15 ஆயிரத்து 78 பெட்ரோல் பங்குகள், 6 ஆயிரத்து 58 சமையல் எரிவாயு ஏஜென்சி கள், 4 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், 52 பாட்லிங் பிளாண்ட், 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் என உள்ளன. இந்த பொதுத்துறை நிறுவனம் ஏறக்குறைய 7 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவில் உள்ள சொத்துக்களை மிக குறைந்த விலைக்கு அதானி போன்ற தனியார் முதலாளிகளுக்கு விற்க மத்திய பாஜக அரசு முயற்சித்து வருவதை கை விட வேண்டும்’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் கே.அர்ஜூணன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பின ர்கள் சி.சண்முகம், வி.குப்பன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் பி.துளசிநாராயணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.