திருவள்ளூர், ஜூலை 26- தனியார் பர்னிச்சர் நிறுவனத்தில் தொழி லாளர்கள் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய் துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி சனிக்கிழ மையன்று (ஜூலை 25) அந்த தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், காக்களூர் தொழிற்பேட்டையில் போர்டே பர்னிச்சர் இந்தியா என்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் 98 பேர் நிரந்தர தொழிலா ளர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழி லாளர்கள், நூறு பேர் நிர்வாக ஊழியர்கள் என பணியாற்றி வருகின்றனர். இங்கு வீட்டு உபயோக பொருட்கள் தயாரித்து, பல்வேறு நாடுகளில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஊரடங்கையொட்டி சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும் என நிர்வாகத்திடம் இந்தியன் பர்னிச்சர் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்காத நிர்வாகம் ஜூன் 5 அன்று சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.சுரேஷ், துணைத் தலைவர் ஆர்.நாராயணன் உட்பட 16 பேரை பணி நீக்கம் செய்தது. இது குறித்து சென்னை தொழிலாளர் நலத்துறை முன்பு பிரச்சினையை பேசி தீர்ப்பதற்கு பதிலாக, பிரச்சனையை திசை திருப்பும் வகையில் நிர்வாகம் செயல்படு கிறது. இதனைக் கண்டித்து தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் செயலாளர் ஏ.சுரேஷ், துணைத் தலைவர்கள் ஆர்.நாராயணன், கே.ஜி.முரளி தரன், பொருளாளர் கணபதி உள்ளிட்டோர் பேசினர்.
வேலை நிறுத்த போராட்டம்?
இந்நிலையில் ஜூலை 27 அன்று தொழிலா ளர்களின் சட்ட விரோத பணி நீக்கம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்ற உள்ளது. இதில் சுமுக தீர்வு ஏற்படவில்லை என்றால் அடுத்த கட்டமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சிஐடியு தலைவர்கள் தெரி வித்துள்ளனர்.