tamilnadu

img

திருப்பூரில் முகமூடி கொள்ளையர்கள் நான்கு பேர் கைது

திருப்பூர்,செப்.12- திருப்பூர் மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பல்வேறு வீடுகளில் கொள்ளை அடித்துக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த முகமூடிக் கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் கூறியது: 
சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தும், மோப்ப நாய்கள் உதவியுடனும் முகமூடி கொள்ளையர்கள் தப்பிச் சென்ற திசையினை ஆராய்ந்து குற்றவாளிகளைப் பிடித்துள்ளோம்.
 இதில் சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிவகுரு(45) கள்ளக்குறிச்சி யை சேர்ந்த ராஜா(40) சுரேஷ்(34), தங்கராஜ்(55) என நான்கு பேரைக் கைது செய்து உள்ளோம். இவர்கள் மீது 20க்கும் ஏற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது