tamilnadu

img

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெற போரி கையெழுத்து இயக்கம்

அவிநாசி, பிப். 2- அவிநாசி ஊராட்சி, பேரூ ராட்சி பகுதிகளில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி அவி நாசி ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியி னர் வீடு வீடாகச் சென்று கையெ ழுத்து இயக்கம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக பூண்டி பேரூராட் சிக்குட்பட்ட பகுதியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய கவுன்சிலர் முத்துச்சாமி, திருமுரு கன்பூண்டி, அம்மாபாளையம் நிர்வாகிகள் சுப்பிரமணி, பாலசுப் பிரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின்  ஒன்றியச் செயலாளர் பழனிசாமி, பாரதி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் நிர்வாகி நஞ்சப் பன், யுவராஜ், காங்கிரஸ் கட்சி யின் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கம் நடத்தினர். தாராபுரம் தாராபுரம் அண்ணாசிலை முன்பு திமுக தெற்கு மாவட்ட செய லாளர் இல.பத்மநாபன் தலைமை யில் நடைபெற்ற கையெழுத்து பெறும் இயக்கத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலை வர் வழக்கறிஞர் தென்னரசு, தாரா புரம் சட்டமன்ற உறுப்பினர் காளி முத்து, திமுக நகர செயலாளர் தன சேகர், ஒன்றிய செயலாளர் செந் தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் என்.கனகராஜ், மதிமுக நிர்வாகி கவின்,நாகராஜ், தி.க மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில், குடி யுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதி ராக பொதுமக்கள் கையெழுத் திட்டனர்.