திருப்பூர், அக். 17- திருப்பூர் மாவட்டத் தில் இடர் மீட்பு நடவடிக் கைகளில் தொய்வு ஏற்பட் டுள்ளதாக புகார் எழுந்துள் ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் புதன் கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக பல் வேறு பகுதிகளில் குடியி ருப்புகளில் மழைநீர் புகுந்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. சேகாம்பாளையம் ஆதி திராவிட மக்கள் குடியி ருப்புப் பகுதியில் தண்ணீர் வடிந்து செல்ல வழியில் லாமல் வீதிகளிலும், தாழ் வான வீட்டுப் பகுதிகளி லும் சேறும், சகதியுமாக மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. அரசு நிர்வாகம் மழை பாதிப்புகளைத்தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தாலும், இப்பகுதியில் தேங்கியுள்ள நீரை வெளியேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக தேங்கியி ருக்கும் நீரை அகற்றவும், மக்களுக்கு சுகாதாரம் பாதிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் வலி யுறுத்தினர்.