tamilnadu

img

ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

 அவிநாசி, நவ.13- சேவூர் அரசு மருத்துவமனையில் ஊராட்சியில் பணிபுரியும் சுகாதார பணியாளர்கள், தூய்மை காவலர் களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதனன்று நடைபெற் றது. சேவூர், முறியாண்டம்பாளையம், பாப்பாங்குளம், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி மற்றும் சேவூர் சுற்றுப் பகுதியில் உள்ள ஊராட்சியில் பணிபுரிவோருக்கான சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்தம் மற்றும் சிறுநீராக பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை கள் நடைபெற்றது. மேலும் பணியின் போது உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பணியாற்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் யசோதா, சுகாதார ஆய்வாளர் ரமேஷ், ஊராட்சி செயலர்கள் எம்.கண் ணன், கே.மகாலட்சுமி, ஆர்.பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.