tamilnadu

img

செப்டிக் டேங்க்கைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர கோரிக்கை

அவிநாசி, செப். 4- அவிநாசி முத்து செட்டிபாளையத்தில் புதிதாகக் கட்டப் பட்டுள்ள செப்டிக் டேங்க்கைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வியாழனன்று பேரூராட்சி சுகாதார ஆய்வாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அவிநாசி பேரூராட்சிக்குட்பட்ட 16-வது வார்டு பகுதி யில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்ற னர். இப்பகுதி மக்களுக்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டித்தரப்பட்ட பொதுக் கழிப்பிடம், ஆறு மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து கழிவுநீர் வெளியேறி அப்பகுதி முழு வதும் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதி  மக்களும், இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினரும் புதிதாக செப்டிக் டேங்க் கட்டித்தரக் கோரி அவிநாசி பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்த னர்.  இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் புதிதாக செப்டிக் டேங்க் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டி முடிக்கப்பட்ட செப்டிக் டேங்க் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இந்நிலையில், கட்டி முடிக்கப்பட்ட செப்டிக் டேங்க்கைப் உடனடியாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி னர் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி பேரூ ராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புச்சாமியிடம் மனுவாக அளித்தனர்.