அவிநாசி, ஜூலை 13- அவிநாசியில் மக்கள் நீதிமன்றத்தில் 211 வழக்குகளுக்கு சனியன்று தீர்வு காணப் பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு வின் உத்தரவின்படி திருப்பூர் மாவட் டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ளும் வகையில் மக்கள் நீதி மன்றம் சனியன்று நடை பெற்றது. இதில் சார்பு நீதிமன்ற வழக்கு கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற வழக்குகள் மற்றும் குற்றவியல் நீதிமன்ற வழக்குகள் என இரு அமர்வுகளாக நடை பெற்றது. இம்மக்கள் நீதிமன்றத்திற்கு முறையே சார்பு நீதிபதி பிரபாசந்திரன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தங்கராஜ், ஏ.எஸ். கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, சொத்துத் தொடர்பான வழக்கு, காசோலை மோசடி வழக்கு, சொத்து வரி மேல் முறையீட்டு வழக்கு, வராக் கடன் வழக்கு என மொத்தம் 211 வழக்குகள் சமரச தீர்வு காண வழிவகை செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 64ஆயிரத்து 497 மதிப்பிலான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் அரசு, தனியார் காப்பீட்டு அலுவலர்கள், அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் வழக்குகளில் தொடர் புடையோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.