திருப்பூர், மே 24 - வெள்ளகோவில் நகராட்சியில் கொரோனா ஊரடங்கை அமல்படுத்து வதாகக் கூறி மளிகைக் கடைகள், டீ கடைகள் உள்பட சாமானிய வியாபாரி களிடம் ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து நகராட்சி ஆணையர் அத்துமீறி நடந்து கொள்வதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டி யுள்ளனர். மேலும், “கடையைத் திறந் தால் அபராதம் விதிப்பேன், கட்ட முடியாவிட்டால் கடையை மூடி விட்டுப் போ, அம்மா உணவகத்தில் போய் சாப்பிடு!” என அதிகார அத்து மீறலுடன் நகராட்சி ஆணையர் நடந்து கொள்வதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், வெள்ள கோவில் நகராட்சி ஆணையராக இருப் பவர் சசிகலா.
இவர் கொரோனா ஊரடங்கு அமலாக்கப்படுவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்புதான் இங்கு நகராட்சி ஆணையராகப் பொறுப் பேற்றார். கொரோனா ஊரடங்கினால் சாமானிய ஏழை, எளிய மக்கள் இரண்டு மாத காலமாக வேலை இல்லா மலும், வருமானம் இல்லாமலும் கடுமையாக சிரமப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில் ஊரடங்கு தொட ரும் நிலையில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக பேக்கரிகள் திறக் கலாம். தேநீர்க் கடைகள் குறிப்பிட்ட நேரம் திறந்து பார்சல் வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.
இந்நிலையில், வெள்ளக்கோவில் நக ராட்சியில் மட்டும் நகராட்சி ஆணை யர் சசிகலா மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பிறப்பிக்கும் ஆணைகளைப் பற்றி பொருட் படுத்தாமல் பொதுமக்கள், வர்த்தகர் கள், சிறு, குறு வியாபாரிகளிடம் அதிகார அத்துமீறலுடன் தன்னிச் சையாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். குறிப்பாக மளிகை, காய்கறிக் கடைகள் இரவு 7 மணி வரை திறந்திருக் கலாம் எனவும் தனிநபர்கள் முகக் கவசம் அணிந்து குறிப்பிட்ட இடை வெளியுடன் வந்து பொருட்களை வாங்கிச் செல்லலாம் எனவும் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் சமீ பத்தில், வெள்ளக்கோவில் கோவை சாலையில் காலை 7 மணிக்கே நக ராட்சி ஊழியர்கள் ஒரு மளிகைக் கடைக்குச் சென்று விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று அபராதம் விதித்துள்ளனர்.
மூன்று பேர் மட்டுமே கடையில் நின்று கொண்டிருந்த போதும் ஊரடங்கு உத்தரவை மதிக் காமல் அதிகமானோர் இருந்ததாகக் கூறி அந்த கடை உரிமையாளருக்கு ரூ. 4 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். அதேபோல் கோவை சாலை, ஈரோடு சாலைகளில் உள்ள தேநீர்க்கடைகள், சிறு கடைகளுக்குச் செல்லும் நக ராட்சி தற்காலிக ஊழியர்கள் உடனடி யாக ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இரண்டு மாதமாக வேலையில்லாமல், வருமானம் இல் ்லாமல் இப்போதுதான் கடைகளைத் திறந்திருக்கிறோம், இவ்வளவு அபராதம் விதித்தால் என்ன செய்வது என்று வியாபாரிகள் கேட்டாலும் மிரட்டி அபராதம் வசூலித்துச் செல் வதாகத் தெரிகிறது. நாள் முழுவதும் வியாபாரம் செய்தாலும் ஆயிரம்தான் கிடைக்கும் அதையும் வாங்கிச் சென்றால் நாங்கள் என்ன செய்வது என்று வியாபாரிகள் பரிதாபமாக கேட்கின்றனர்.
இதுகுறித்து தேநீர்க்கடை நடத் தும் ஒரு பெண் கூறுகையில், நக ராட்சி ஆணையரிடம் நாங்கள் எப்படி பிழைப்பது என்று கேட்டால், ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட முடியா விட்டால் கடையை பூட்டிவிட்டு, அம்மா உணவகத்திற்குச் சென்று சாப் பிடு என கூறியதாகத் தெரிவித்தார். அதேபோல் வியாபாரி ஒருவர் சரக்கு ஆட்டோவில் வெங்காயம் விற்றுக் கொண்டுச் சென்றபோது, நகராட்சி ஆணையர் வீடு இருந்த பகுதி என தெரியாமல் மாலை நேரத்தில் அப் பகுதியில் சென்றவரை ஆணையர் சசிகலா தடுத்து நிறுத்தி தரக்குறை வாக பேசி தராசை பறித்துள்ளார். அத் தராசை நகராட்சி அலுவலகத்துக்கு நான்கைந்து நாட்கள் அலையவைத்து பிறகு கொடுத்துள்ளார் என வேதனை தெரிவித்துள்ளனர்.
பொதுவாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் ஊரடங்கு நிபந்தனை கள் தளர்த்தப்பட்டு தேநீர்க்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் செயல்படு கின்றன. ஆனால் முதல்வரோ, மாவட்ட ஆட்சியரோ உத்தரவு போட் டாலும் வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் மட்டும் எதையும் பொருட் படுத்தாமல், தனக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்று சொல்லி தான் நினைத்தபடி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார் என வெள்ள கோவில் மக்கள் மனக்குமுறலுடன் தெரிவிக்கின்றனர். இதனால் வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் சசிகலா மீது மாவட்ட ஆட்சியர் உடனடியாக நட வடிக்கை எடுத்து அவரது அதிகார அத்துமீறலைத் தடுத்து நிறுத்து வதோடு ஏற்கெனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த நகர மக்கள் கூறுகின்றனர். (ந.நி)