அவிநாசி, ஜூன் 13- அவிநாசியில் காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை ஒழுங்குபடுத்த முடியாமல் போக்குவரத்து காவல்துறை திணறி வருவ தாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின் றனர். அவிநாசி சேவூர் செல் லும் பிரிவு, மங்கலம் செல் லும் சாலை, ஆட்டையம் பாளையம் பிரிவு, அவி நாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகில் ஆகிய பகுதிகளில் காலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி குழந்தைகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். குறிப்பாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அருகில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். இந்த போக்குவரத்து நெரிசல் நண்பகல் 12 மணி வரை நீடிக்கிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறு கையில், திருமணம் மற்றும் விசேஷ நாட் களில் உதகை செல்லும் சாலை, மங்கலம் செல்லும் சாலை, பழங்கரை பிரிவு, அவி நாசி ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் நியமனம் செய்த ஊர்க்காவல் படையை சேர்ந்த இளை ஞர்கள் வாகன சோதனை என்ற பெயரில் அநாகரிகமாக நடந்து கொள்கிறார்கள். இதனை போக்கு வரத்து காவல்துறையினரும் கண்டிப் பதில்லை. மேலும் வாகனங்களில் வருவோர் மீது வழக்குகள் பதிவு செய்ய ஆர்வம் காட்டும் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் நெரிசலை கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.