அவிநாசி, அக்.15- அவிநாசி பகுதியில் திங்களன்று இரவு பெய்த பலத்த மழையால் கரும்பு, வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தது. அவிநாசி ஒன்றிய பகுதி களில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் திங்களன்று இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக முறியாண்டம்பாளையம், ஆலத்தூர், வடுகபாளையம், பாப்பாங்குளம், மங் கரசு வலையபாளையம், பொங்கலூர், தண்டுக்காரன்பாளையம், கானூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய தோட்டங்க ளில் சாகுபடி செய்திருந்த 2ஆயிரத்திற் கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது. இதேபோல், சேவூர் பந்தம்பாளையத் தில் அவினாசியப்பன் என்பவருக்கு சொந்த மான பாலத்தோட்டடத்தில் 2 ஏக்கரில் பயிரிட்டிருந்த கரும்புகள் சாய்ந்தது. இத னால் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந் துள்ளனர்.