திருப்பூர், மார்ச் 9 – திருப்பூர் ஒன்றியம், இடுவாய் ஊராட்சியில் 60 பயனாளிகளுக்கு விலையில்லா கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்களன்று நடைபெற்றது. கடந்த வருடம் அரசினால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த பயனாளிகளுக்கு 25 கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி இடுவாய் சின்னம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இடுவாய் பஞ்சாயத்து முழுவதற்குமான கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பயனாளிகளுக்கு இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன் கோழிக்குஞ்சுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி யில் இடுவாய் பகுதி கால்நடை மருத்துவர் டாக்டர் கல்பனா, நிலவள வங்கி இயக்குனர் கே.ஈஸ்வரன், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் சென்னியப்பன், எட்டாவது வார்டு உறுப் பினர் கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.