tamilnadu

பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தில் தொடரும் வாடிக்கையாளர் முற்றுகை

திருப்பூர், ஜூன் 5 - திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள பஜாஜ் பைனானஸ் நிறுவனத்தில் தினமும் வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுவது தொடர் கதையாக உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய  அரசு ஊரடங்கு அமல்படுத்திய பிறகு தொழிலாளர்கள் தங் களது சொந்த வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்கள் செலுத்த வேண்டிய கடன்களுக்கான மாதாந் திர தொகையை ஆறுமாதங்களுக்கு செலுத்த தேவை யில்லை என மத்திய அரசு சலுகையை அறிவித்தது. இந்த விதிமுறைகளை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் ஏற் காமல் தொடர்ந்து வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் காசோலைகளை செலுத்தி செக் பவுன்ஸ் செய்து  வருவதாகவும், இதனால் ஒவ்வொரு முறையும் ரூ.590 வரை கட்டணம் விதிக்கப்படுவதாகவும், ஒரு மாதத்திற்கு நான்கு முறை வரை செக் பவுன்ஸ்  செய்வதால் மாதாந்திர கட்ட ணத்தை கடந்து செக் பவுன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும்  வாடிக்கை யாளர்கள் புகார் தெரிவித்து திருப்பூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.