அவிநாசி, ஏப்.21-
அவிநாசி அருகே தேவாம்பாளையத்தில் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள் வழங்கு வந்த வருவாய் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட தேவாம்பாளையத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு நாடுமுழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக அரசு பட்டினியில் வாடும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவிநாசி வருவாய் துறையினர் உணவுப் பொருட்கள் வழங்க அப்பகுதிக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த அதிமுகவைச் சேர்ந்த பழங்கரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நடராஜ் , இவரே உணவுப்பொருட்களை வழங்குவதாக வருவாய்த் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் உணவுப் பொருட்கள் வழங்காமல் வருவாய்த் துறையினர் திரும்பிச் சென்றுள்ளனர். மேலும் அதிமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது அவிநாசி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.