tamilnadu

img

பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு ஓய்வு பெற்றோர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், செப். 12 – பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு துறையில் ஓய்வு பெற்றோருக்கு பென் சன் உயர்வு, மருத்துவ தொகை நிலு வையை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 2017 ஜனவரி முதல் கணக்கிட்டு பென்சன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ செலவுத் தொகையை தாமதமின்றி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப் பப்பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப் பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில உதவித் தலைவர் பா.சௌந்தரபாண் ியன் தலைமை ஏற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச் செய லாளர் எஸ்.சுப்பிரமணியன், கிளைத் தலைவர் பி.வாலீசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடர்பு ஓய்வு பெற்றோர் சங்கத் தைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். நிறைவாக ரத்தினம் நன்றி கூறினார்.